80. அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் கோயில்
இறைவன் சக்கரவாகேஸ்வரர்
இறைவி தேவநாயகி
தீர்த்தம் காவிரி
தல விருட்சம் வில்வம்
பதிகம் திருஞானசம்பந்தர்
தல இருப்பிடம் திருச்சக்கரப்பள்ளி, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'ஐயம்பேட்டை' என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் ஐயம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோயில் வளைவுப் பார்த்து அந்த தெருவில் சென்றால் கோயிலை அடையலாம். தஞ்சாவூரில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. பசுபதி கோயிலில் இருந்து சுமார் 3 கி.மீ. ஐயம்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ.
தலச்சிறப்பு

Chakkarapalli Gopuramமகாவிஷ்ணு இழந்த தமது சக்கரத்தைத் திரும்பப் பெற சிவபூஜை செய்து வழிபட்ட தலமாதலால் 'சக்கரப்பள்ளி' என்று பெயர் பெற்றது. அம்பிகை சக்கரவாகப் பறவையாக வந்து பூசித்ததால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

மூலவர் 'சக்கரவாகேஸ்வரர்' 'ஆலந்துறைநாதர்' என்னும் திருநாமங்களுடன், பெரிய லிங்க வடிவத்தில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'தேவநாயகி', 'அல்லியங்கோதை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

Chakkarapalli Praharamதிருவையாறு சப்த ஸ்தானத் தலங்கள் இருப்பது போல், இந்த ஊரை மையமாக வைத்து 'சப்த மங்கை' தலங்கள் உள்ளன. இந்த ஏழு ஊர்களும் சப்த மாதர்கள் சிவபெருமானை வழிபட்ட தலங்களாகும். புள்ளமங்கை, தாழைமங்கை, பசுபதிமங்கை, நந்திமங்கை, சூலமங்கை, அரிமங்கை ஆகியவை மற்ற தலங்களாகும். இதில் புள்ளமங்கை தவிர மற்ற ஐந்து தலங்களும் பாடல் பெற்ற தலங்கள் அல்ல.

பங்குனி மாதம் சங்கடஹர சதுர்த்தியன்று சூரியனின் கதிர்கள் சுவாமி மீது பட்டு சூரிய பூஜை நடைபெறுகிறது.

இக்கோயிலைச் சுற்றி பெரும்பாலும் இந்துக்களே இல்லை. முஸ்லீம்களே வசிக்கின்றனர்.

இந்திரன் மகனான ஜயந்தன், தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.

அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளர். கோயில் காலை 9 மணி முதல் மதியம் 10 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com